அது முடிந்து விட்ட பிறகு..
ஒவ்வொரு உயிரும் இறக்கிறது
என்கிறான் மனிதன்.
உயிரற்ற காலம் கூட இறந்துகொண்டிருகிறது
என்பதை உணராத காரணத்தினால்..
சடங்குகள் செய்து,
மனநிறைவோடு அனுப்பி வைத்து வருகிறான்
இறந்த மனித உடலை-
புழு பூச்சிகளின் சாவிற்கு
சடங்குகள் ஏதும் செய்வதில்லையே-
ஏன்?
மனிதனின் உருவமும்,
செய்த தவறுகளும் பெரியன
என்பவைதாம் காரணங்களோ???!!!
-யவனா
No comments:
Post a Comment
தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................