இக்கணமும்,
முக்காலமும்,
நன்றியுணர்ச்சியோடு
என்றென்றும் நான்
அக்காலம் நீ எனக்கு செய்த உதவியினாலேயே
இக்காலம் நான் இங்கு வாழ்கிறேன் என்பதை
மறந்து விடவில்லை நான்...
நன்றியை விவரிக்க இயலாமல்,
இத்துணை வார்த்தைகளைத் தேடியும்,
என் கடன் சுமை குறையவில்லை ..
என் பிணம் கல்லறை செல்லும் வரை,
"தீராத" கடன் இது-
நான் உனக்குப் பட்ட நன்றிக்கடன்....
-யவனா
No comments:
Post a Comment
தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................