பின் தொடருபவர்கள்

Friday, April 30, 2010

அவள் வாழ்வின் பலம்

அவள் வாழ்வில்,
அவ்விறைவன் பலமாகப் படைத்தது
ஒன்றே ஒன்றைத்தான் -
கண்களில் கண்ணீர் சுரக்கும் சுரப்பிகளை......

-யவனா

யார் செய்த பாவம்????

கருவறையை விட்டு,
வெளியுலகை எட்டிப் பார்க்கத் துடிக்கும் நிலையில்,
மடியினில் சுகமான பாரத்தை ஏற்றிக்கொண்டும்,
வேலைக்குச் செல்கிறாள்-வறுமையின் காரணமாய்....
தமிழச்சி இந்நிலைக்கு ஆளாக,
முன் ஜென்மம் யார் செய்த பாவம் காரணமோ????????


-யவனா
அசிங்கமான கம்பளிப்பூச்சி
அம்மாவிடமிருந்து,
அழகான பட்டாம்பூச்சி
குழந்தை வருவதைப் போலத்தான்
மாதவியிடமிருந்து
மணிமேகலா தெய்வம் தோன்றியதோ????
அதனால் தானோ.....
அவ்வன்னையின் கணவன்
கோவலனும் தெய்வமாதலால்தான்
கண்ணகி அவனை
மீண்டும் ஏற்றுக்கொண்டாளோ????

-யவனா

அழகி

துதிக்கின்ற மாலியே.......
மாலையில்
மறைந்து
மக்கள்
கண் மயக்கி,
சற்று
நேரத்தில் கவலையுற்றுதான்
உன்
மனைவியை அனுப்பி வைக்கிறாயோ உலகைக்காக்க??
அவள்
அழகில் நீயே மயக்கமுற்று,
மாதமொருமுறை
அவளை அனுப்ப மறுக்கும்போது,
நாங்களெல்லாம்
எம்மாத்திரம்???
அவள்
அழகுக்கு முன்னே..........
-யவனா

வேய்ந்த கூடை



மடல் மடலாய்ப் பின்னல்கள் ....
திக்கு திசை தெரியாமல் தவிக்கிறான் ..
பாவம் அந்த அப்பாவி வெள்ளையன் ...
மனதை மயக்கும் அப்பின்னல்களின் தாயாய்-
ஒரு இளம் தமிழச்சி ....
காசு பணம் கொடுத்து,
அப்பின்னல்களை மட்டும் அல்லாமல்,
அதன் தாயையும் விலைக்கு வாங்க எண்ணி,
ஏந்தினான் கைகளை...
பிச்சை எடுத்து பிழைத்தாலும்,
தமிழனுக்கு மட்டுமே தலை வணங்குவேனென்று
தலை நிமிர்ந்து தமிழகத்தின் மண் வாசனையை மேலும் ஏற்றினாள்......... !!!!!!!!!!!!!

-யவனா