உன்னை நினைத்து கிறுக்கிக்
கொண்டிருந்த
தனிமை நிசப்த இரவில்,
என் பேனா முள்ளும் காகிதமும்
பேசிக்கொள்ளும் ஒலியும்,
மின்சாரம் இல்லா இவ்விரவில்,
என் கையோடு கூடிய பேனா
நிழலின் ஒளியும்,
மழையும், காற்றும் நின்ற
புழுக்கத்தில்
என் நெற்றியில் வடியும்
வியர்வையும்,
மெல்ல தென்றல் வீச ஆரம்பித்ததில்,
நடனமிடும் சாளரத்தின் ஆடையும்,
நடுநிசியிலும் திருட்டுத்தனமாய்
கிறுக்கிக் கொண்டிருக்கும் மூடத்தனமான அசாத்தியத் தைரியமும்,
உடைகளும்,புத்தகங்களுமாய் கிடந்த
என் படுக்கை அறையின்
அலங்கோலங்களையும் அரை வெளிச்சத்தில்
இரசித்தபடி,
இப்படியாக என்னென்னவோ மனதிற்குள்
உளறியபடி,
பல நாட்கள் கழித்து,
"மிகவும்" பழக்கப்பட்ட,
என் அருமை தோழிக்கு,
அவள் கண்களுக்கு
வெளிச்சம் கொடுத்து,
உயிர் பெற வைத்த,
உன் நினைவுகளுக்கு,
உன்னவளின் நன்றிகள்
என்றென்றும்....
கொண்டிருந்த
தனிமை நிசப்த இரவில்,
என் பேனா முள்ளும் காகிதமும்
பேசிக்கொள்ளும் ஒலியும்,
மின்சாரம் இல்லா இவ்விரவில்,
என் கையோடு கூடிய பேனா
நிழலின் ஒளியும்,
மழையும், காற்றும் நின்ற
புழுக்கத்தில்
என் நெற்றியில் வடியும்
வியர்வையும்,
மெல்ல தென்றல் வீச ஆரம்பித்ததில்,
நடனமிடும் சாளரத்தின் ஆடையும்,
நடுநிசியிலும் திருட்டுத்தனமாய்
கிறுக்கிக் கொண்டிருக்கும் மூடத்தனமான அசாத்தியத் தைரியமும்,
உடைகளும்,புத்தகங்களுமாய் கிடந்த
என் படுக்கை அறையின்
அலங்கோலங்களையும் அரை வெளிச்சத்தில்
இரசித்தபடி,
இப்படியாக என்னென்னவோ மனதிற்குள்
உளறியபடி,
பல நாட்கள் கழித்து,
"மிகவும்" பழக்கப்பட்ட,
என் அருமை தோழிக்கு,
அவள் கண்களுக்கு
வெளிச்சம் கொடுத்து,
உயிர் பெற வைத்த,
உன் நினைவுகளுக்கு,
உன்னவளின் நன்றிகள்
என்றென்றும்....