பின் தொடருபவர்கள்

Saturday, May 1, 2010

ஆசைகள் பல முடியாத காலங்களில்...

நிர்வாணமாய் இருந்த பருவத்தில்
உடை உடுத்தி பார்க்க ஆசைப்பட்டு,
பாவாடை சட்டை அணியும் பருவத்தில்
தாவணி உடுத்தி பார்க்க ஆசைபட்டு,
தாவணி அணியும் பருவத்தில்
புடவை உடுத்தி பார்க்க ஆசை பட்டு,
புடவை கட்டும் பருவத்தில்,
அன்னையாக ஆசை பட்டு,
அன்பிற்குரியவரிடம் அவளை ஒப்படைத்தால்..
பெற்றோரின் துணையோடு...
துணையின் பராமரிப்பில்,
தாயான பின்பு,
தன்னலமற்றவளாய்,
தன பிஞ்சு பருவங்களைக் கடக்கையில்,
தான் தன்
பருவங்களை நினைவு கூர்ந்த போது,
ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தவளாய்
தான் கடைசி பருவத்தில் பயணிக்கிறோம்
என்றுணர்ந்து
சிரித்த படியே
சோறுஊட்டினாள்
தன் பேத்திக்கு....


-யவனா

No comments:

Post a Comment

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................