பின் தொடருபவர்கள்

Monday, June 21, 2010

அசுணப் பறவை

     பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசையை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்து விட்டாலே போதுமாம். துடி துடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்து விடுமாம்..

பிறக்கும் போதே இறந்த குழந்தை



அன்னையின் கருவறை மறவாமல் இருக்க,
மனனம் செய்து கொண்டிருந்த வேளையில்,

என்னுடைய ஜனனமும், மரணமும்....!!!!

மருதாணி

                                                                                   
                                                                                   கைகளும் இலைகளும்
குழைந்துப் 
பெற்றெடுத்த
குழந்தை...

அவள் வாழ்வு











தாமரை இலையில் உருண்டோடி
ஆற்றில் கலந்த தண்ணீர் துளி போல,
அவள் இதழில் உருண்டோடி
கடலில் கலந்தன கண்ணீர்த் துளிகள்...
நா வந்தடைந்ததும், உப்பைக் கசக்கவில்லை
அத்துளிகள்---
மாறாய் தேனாய் இனித்தன...
......

மாவடு

எத்துணை கோடிகளுக்கு 
அதிபராயினும்,
பாட்டி கைபட்ட அந்த 
பழைய சாத மோர் கரைசலுக்கும், மாவடுவிற்கும் 
என்றுமே தமிழன் அடிமைதான்...
அன்னை மடி எவ்வளவு சுகமானதோ...
அவ்வளவு சுகமான 
அமுதமது... 

தென்றல்

தேன்மதுரத் தமிழோசை 
செவிவந்து சேர்த்திடுவாய்!
செல்வமளிக்கும்
இயற்கை அன்னையே!
உன் ஓசைக்கு ஓய்வில்லையா?
உன் மீது இச்சை கொள்ளாத,
மனமுண்டோ இப்பாரினில்?
தாயே உன் கண்களைத் திற;
கவிதைகள் பிறக்கட்டும்,
கவிஞர்கள் பிழைக்கட்டும்...!!!!!!